தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 10:53 AM IST

ETV Bharat / bharat

ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை பறித்துச் சென்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

டெல்லி: நடைமேடையில் விற்பனைக்காக கொண்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களை இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பறித்துச் சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

old delhi  shramik train  migrant workers  டெல்லி  இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருட்டு  Migrant workers loot food packets
ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை திருடிச் சென்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஸ்ராமிக் சிறப்பு ரயலில் பயணம் செய்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், ரயில் நடைமேடையில் ஒருவர் விற்பனைக்காக கொண்டு சென்ற உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை பறித்துச் சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை பறித்துச் சென்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்

டெல்லி பழைய ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பசியோடு இருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர், விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட்களைத் பறித்துச் சென்றனர்.

இதையும் படிங்க: 'அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... வாகனமும் கிடைக்கல' - களத்தில் இறங்கிய சிறுவன்!

ABOUT THE AUTHOR

...view details