ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர் ஒருவர், தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, அவரை கிராமத்தில் 14 நாள்கள் தனிமை மையத்தில் வைத்திருந்தனர். இதில், மன உளைச்சலில் இருந்த தொழிலாளர், தனிமை விரக்தியில் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.