தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 30, 2020, 1:57 AM IST

ETV Bharat / bharat

ஊரடங்கில் சில தளர்வுகள்? - விரைவில் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு காலம் முடிவடைந்த பின்னர் சில பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

corona
corona

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர, ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வு பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

ஒருபுறம் கரோனா என்றால் மற்றொருபுறம் வருமானமின்மை. சிறு, குறு வியாபாரிகள், வணிகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என மாத ஊதியத்தையும், தினசரி வியாபார பணத்தையும் நம்பி வாழ்ந்து வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர வேறு வழியில்லாத காரணத்தால் இந்த தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படுமென்றும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details