கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுப்போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
பின்னர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை தாயகம் அழைத்துவருவதற்காகவும், மருந்துப் பொருள்கள், பரிசோதனை செய்யவேண்டிய மாதிரிகளை எடுத்துச் செல்வதற்காகவும் ஒரு சில விமானங்கள் இயக்கப்பட்டன.
இருந்தபோதிலும், பயணிகள் விமானங்கள் இயக்கப்படுவதற்கு இம்மாதம் 25ஆம் தேதிவரை தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, உள் துறைச் செயலர் அஜய் பல்லா விமான சேவைகள் தொடங்குவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.