தமிழ்நாடு

tamil nadu

'நினைவுச் சின்னங்களால் மக்களை காப்பாற்ற முடியாது'- ஓவைசி பிரமுகர் ட்வீட்

By

Published : Mar 21, 2020, 9:33 PM IST

மும்பை: நோய்த் தொற்றுகளிலிருந்து நினைவுச் சின்னங்களால் மக்களை காப்பாற்ற முடியாது. மருத்துவமனைகள் தேவை என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மகாராஷ்டிரா தலைவர் இம்தியாஸ் ஜலீல் ட்விட்டரில் கூறியுள்ளார்.

AIMIM Maharashtra  Imtiyaz Jaleel  Uddhav Thackeray  Bal Thackeray  Memorials can't protect people  கரோனா தொற்று, நினைவுச் சின்னங்கள், ஓவைசி பிரமுகர் இம்தியாஸ் ஜலீல்
AIMIM Maharashtra Imtiyaz Jaleel Uddhav Thackeray Bal Thackeray Memorials can't protect people கரோனா தொற்று, நினைவுச் சின்னங்கள், ஓவைசி பிரமுகர் இம்தியாஸ் ஜலீல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “எந்தவொரு தலைவரின் நினைவுச் சின்னங்களும் இதுபோன்ற காலங்களில் உங்களைப் பாதுகாக்காது! மருத்துவமனைகள் மட்டுமே அதனை செய்யும்! அதனால்தான் நான் நினைவுக் கட்டடத்தை எதிர்க்கிறேன். அதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து மருத்துவமனைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

முன்னதாக அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் பொதுப் பணத்தில் நினைவுச் சின்னங்களை கட்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு முன்வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மற்றும் பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே ஆகியோருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவிற்கு தற்போதைய தேவை தனிமைப்படுத்தப்படும் இடங்களே!

ABOUT THE AUTHOR

...view details