டெல்லி:வாரணாசியில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 22) காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'நாடு கரோனா தடுப்பூசி காரியத்தில் தன்னிறைவு அடைந்துள்ளது. உள்நாட்டிலேயே நாம் இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறோம். இது உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வாரணாசியைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் மருத்துவத்துறையும், அதன் கட்டமைப்புகளும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்படும். 2014ஆம் ஆண்டிலிருந்தே நான் வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளேன்.