இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாளில்தான் இயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சியளித்ததாக கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். இதனை அவர்கள் ஈஸ்டராக கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று ஈஸ்டரை வெகு விமரிசையாக கொண்டாடிவருகின்றனர். இதனிடையே, கரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டு வர இந்த ஈஸ்டர் நமக்கு பலத்தை அளிக்கட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.