தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து மீள ஈஸ்டர் நமக்கு பலம் அளிக்கட்டும் - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

டெல்லி: கரோனாவிலிருந்து மீண்டு வர இந்த ஈஸ்டர் தினம் நமக்கு பலம் அளிக்கட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Modi
Modi

By

Published : Apr 12, 2020, 10:40 AM IST

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாளில்தான் இயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சியளித்ததாக கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். இதனை அவர்கள் ஈஸ்டராக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று ஈஸ்டரை வெகு விமரிசையாக கொண்டாடிவருகின்றனர். இதனிடையே, கரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டு வர இந்த ஈஸ்டர் நமக்கு பலத்தை அளிக்கட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள். ஏழை எளியோரை உயர்த்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் இயேசு கிறிஸ்து. இதுபோன்ற அவரின் உயர் எண்ணங்களை இந்நாளில் நினைவில்கொள்வோம். கரோனாவை வெல்ல இந்த நாள் நமக்கு பலம் அளிக்கும். சுகாதாரமான உலகை படைப்போம்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’தேவையில்லாமல் வெளியே வந்தா இந்த பாட்ட ரீப்பிட்டடா கேட்பீங்க’ - காவல் துறையின் கொடூர அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details