தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2020, 7:51 PM IST

ETV Bharat / bharat

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் உயர்வு; பெட்ரோல் ரூ.80ஐ கடந்தது

சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை இன்று உயர்வைச் சந்தித்தன. மேலும் டீசல் விலையைத் தொடர்ந்து டெல்லி நுகர்வோர் சந்தையில் பெட்ரோலின் விலையும் 80 ரூபாயைக் கடந்துள்ளது.

பங்குச்சந்தை நிலவரம்
பங்குச்சந்தை நிலவரம்

மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நாள் முடிவில், சென்செக்ஸ் 329.17 புள்ளிகள் (+0.94%) உயர்ந்து 35,171.27ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.10 புள்ளிகள் (+0.91%) உயர்ந்து 10,383.00ஆக இருந்தது.

  • +இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 6.94% (ரூ.748.15) அதிகபட்சமாக உயர்ந்திருந்தது.
  • -ஐடிசி பங்குகளின் விலை 3.54% (ரூ.195.10) அதிகபட்சமாக சரிந்திருந்தது.

மேலும், டெல்லி நுகர்வோர் சந்தை நிலவரப்படி டீசலின் விலை 80 ரூபாயைக் கடந்து, இந்த மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு நேற்று வர்த்தகமானது. அதேபோன்று பெட்ரோலின் விலையும் டெல்லி சந்தையில் 80 ரூபாயைக் கடந்து வணிகமானது.

ABOUT THE AUTHOR

...view details