தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூரில் ரூ.92 லட்சம் மதிப்பிலான போதை மருந்துகள் பறிமுதல்! - Rs.92 lakh worth of drugs seized in Manipur

மணிப்பூர்: ரூ.92 லட்சம் மதிப்புள்ள 19 பாக்கெட் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை அஸ்ஸாம் ரைப்பிள் படையினர் பறிமுதல் செய்தனர்.

banned drugs

By

Published : Nov 5, 2019, 5:27 PM IST

கிழக்கு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஸ்ஸாம் ரைப்பிள் படையினர், மணிப்பூரில் உள்ள டேங்நௌபல் மாவட்டத்தின் குடெங்தாபி பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய வகையில் நபர் ஒருவர் ஒரு பையை வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தார்.

இதைக்கண்ட ரைப்பிள் படையினர் அவரிடமிருந்த பையைச் சோதனை செய்தனர். அதில், ரூ.92 லட்சம் மதிப்புள்ள 19 பாக்கெட் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் இருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, ரைப்பிள் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, இளைஞரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்விரோதம்: துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுட்ட மாணவன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details