பெங்களூருவின் பி.இ.எல். பகுதியில் காலில் சங்கிலி கட்டப்ப்ட்ட நிலையில் நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நபர் கரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவர்கள் அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மணி நேரத்திற்குப் பிறகு அந்நபர் மார்க்கெட் அருகில் நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.