மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சந்திரிகோனா பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணிமா மவுர். இவர் கல்லீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அருகில் உள்ள மருந்தகங்களில் போதிய மருந்துப் பொருள்கள் கையிருப்பு இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.
இதையறிந்த மருந்தியல் மாணவரும், பூர்ணிமா மவுரின் உறவினருமான சௌமித்ரா மவுர் என்பவர் மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவரும் ஒரு வானொலிக்கு இது குறித்த தகவலை அளித்துள்ளார்.
வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட தகவலையடுத்து பூர்ணிமா மவுரை மருத்துவர் ஒருவர் தொடர்புகொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து போதிய மருந்துப் பொருள்களை பரிந்துரை செய்தார்.