தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 17, 2019, 3:25 PM IST

ETV Bharat / bharat

தங்கை கணவரைக் கொல்ல முயன்று தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளைஞர்!

மும்பை: 32 வயது இளைஞர் தங்கையின் வீட்டில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

man shoot
man shoot

32 வயதான இளைஞர், தங்கை கணவரை கொல்ல முயற்சித்ததில் தோல்வியுற்றதால், புறநகர் கண்டிவாலியில் உள்ள தனது சகோதரியின் குடியிருப்பில் தன்னைத்தானே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள் கிழமை இரவு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த படுகேஸ்வர் திரிலோக் திவாரி, தனது சகோதரி வந்தனா (20), தங்கை கணவர் ரோஹித் (27) ஆகியோரை சந்திக்க வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திவாரி, முதலில் ரோஹித்தை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது, ரோஹித் சுதாரித்ததால் துப்பாக்கிச் சூடு படாமல் உயிர் தப்பினார்.

பின்னர் ரோஹித், மனைவி வந்தனா ஆகிய இருவரும் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், திவாரி தங்கையின் வீட்டிற்குள்ளே தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், திவாரியின் தங்கை வந்தனா ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக ரோஹித்தை காதல் திருமணம் செய்து கொண்டார்.

உயிருக்கு ஆபத்து எனக் கூறி நீதிமன்றத்தை நாடினர். இந்தச் சூழலில், திங்கள்கிழமை மாலை, திவாரி தனது தங்கையைக் காண வந்துள்ளார். வந்த இடத்தில் மணமக்களை வாழ்த்தியும், ​ மதுவும் அருந்தியுள்ளார். இரவு அவர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டபின், திவாரி தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால், தங்கை கணவர் என்றும் பாராமல் ரோஹித்தை கொல்ல முயற்சி செய்துள்ளார்.

இருப்பினும், அவரது தங்கையும், தங்கை கணவரும் உயிர் தப்பியோடிய நிலையில், திவாரி வீட்டினுள் கதவை சாத்திக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்றார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்செயலான மரணமாகத்தான் பார்க்கப்படுகிறது. இறந்தவர் துப்பாக்கியை எங்கிருந்து பெற்றார் என்பதையும், அதற்கான உரிமம் அவரிடம் இருக்கிறதா என்பதையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

கடனுக்கு வட்டி கட்டாத உணவக அதிபர் - ஆட்டோவில் கடத்திச் சென்ற வட்டி பிரபாகர்!

ABOUT THE AUTHOR

...view details