தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாய், சகோதரி கொலை: மகன் கொடூரச் செயல்! - பீலாஸ்பூர் கொலை

பிலாஸ்பூர்: தனது தாய், சகோதரி இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Man hacks mother  Mungeli murder  man arrested in Mungeli  Mungeli crime news  சத்தீஸ்கர் கொலை  பீலாஸ்பூர் கொலை  கொலை
man arrested in Mungeli

By

Published : May 8, 2020, 11:30 AM IST

சத்தீஸ்கர் மாநிலம், முங்கேலி மாவட்டம் அருகேயுள்ள ராம்கோபால் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (45). இவருக்கு அனில் யாதவ்(25) என்ற மகனும், மது (19) என்ற மகளும் உள்ளனர். நேற்று அனில் யாதவ் வீட்டில் இருந்தபோது சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த சுனில் யாதவ் தாய் சுனிதாவை சுத்தியைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட சகோதரி மது அவரை தடுக்க முயன்றபோது அவரையும் சராமரியாக தாக்கியுள்ளார்.

இதில் தாய் சுனிதா, சகோதரி மது ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுனில் யாதவை கைது செய்து பிரிவு 302-ன் கீழ் (கொலைக்குற்றம்) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:செங்கல்பட்டிலிருந்து மது பாட்டில்கள் கடத்திய தனியார் தொலைக்காட்சி எடிட்டர்!

ABOUT THE AUTHOR

...view details