தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 2, 2020, 6:18 PM IST

ETV Bharat / bharat

பரோலில் வந்த கைதிக்கு கரோனா தொற்று!

மும்பை: தானே மத்திய சிறையில் இருந்து, பரோலில் வெளிவந்த கைதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள தானே மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த கைதிக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பரோலில் வெளி வந்தவுடன், தனது தங்கையை பார்ப்பதற்காக வடா (Wada) பகுதிக்குச் சென்றுள்ளார், அந்த கைதி. பின்னர், மீண்டும் பால்கர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்குத் திரும்பிய அவரை, உள்ளே அனுமதிக்க கரோனா பரிசோதனை கட்டாயம் என்றனர்.

இதையடுத்து, அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது,அவர் மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் தொடர்பில் இருந்த எட்டு நபர்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை பால்கர் மாவட்டத்தில் 888 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details