தமிழ்நாடு

tamil nadu

சி.ஆர்.பி.எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை!

By

Published : Apr 27, 2020, 12:41 PM IST

மகராஷ்டிரா: மத்திய ஆயூத காவல் படை வீரர் ஒருவர் தூப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CRPF jawan kills self  CRPF  சி.ஆர்.பி.எப் வீரர் தூப்பக்கியால் சுட்டு தற்கொலை!  மகராஷ்டிரா சி.ஆர்.பி.எப் வீரர் தூப்பக்கியால் சுட்டு தற்கொலை!  தூப்பக்கியால் சுட்டு தற்கொலை!
CRPF jawan kills self

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி அருகேயுள்ள பம்ராகத் பகுதியைச் சேர்ந்தவர் தீபக்குமார் (30). இவர் மத்திய ஆயுத காவல் படை வீரராக (சி.ஆர்.பி.எஃப்) 37வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தீபக் நேற்று தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதுடன், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதேபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு, புனேவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கட்சிரோலியில் உள்ள சாவர்கானில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மத்திய ஆயூத காவல் படை வீரர் தூப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சாலையில் புகையிலை பொருட்கள் வீசிச் சென்றவர் கைது !

ABOUT THE AUTHOR

...view details