மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் இயங்கிவரும் உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் காலாவதியான பிஸ்கட், கேக் உள்ளிட்ட குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களை மறுபடியும் பொதி கட்டி (பேக்கிங்) சந்தைப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலைக்கு திடீரென சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, அங்கு ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 200 அட்டைப்பெட்டிகளில் காலாவதியான உணவுப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.