உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் பினா-ஜான்சி ரயில்பாதையில் இருவரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் பேக் கூறுகையில், ”உயிரிழந்தவரில் ஒருவர் பல்லு (22), மற்றொருவர் ரேஷ்மி (18) என விசாரணையில் தெரியவந்தது. உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர், இதற்கு பெற்றோர்கள் மறுக்கவே தற்கொலை செய்துள்ளனர். பல்லு ஏற்கனவே திருமணமானவர்” என்றார்.