தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2020, 4:27 PM IST

ETV Bharat / bharat

இரண்டு நாள் முழு ஊரடங்கு அவசியம் - புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

புதுச்சேரி: கரோனா நோயை கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார் .

Health minister
Health minister

புதுச்சேரியில் கடத்த சில வாரங்களாகப் கரோன தொற்றால் பாதிக்கபட்டர்வகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த மே மாதம் இறுதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. தற்போது புதுச்சேரியில் கரோனா தொற்று தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று(ஆகஸ்ட்24) மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் மேலும் 5 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா நோயைக் கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு நாள்கள் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வலியுறுத்தியுள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தவேண்டும். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், மேலும் 40 சதவீதம் பேர் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க முடியும்.

ஏற்கனவே புதுவையில் கரோனா பரவல் காரணமாக மாநில வருவாய் 50 விழுக்காடு குறைந்துள்ளது. இதுபோன்ற மோசமான சமயத்தில் கூட மத்திய அரசு புதுவைக்கு எந்த உதவியும் செய்யவில்லை ஜிஎஸ்டி வருவாயும் புதுவைக்குக் கிடைக்கப்பெறவில்லை.இந்த இரண்டு நாள் முழு ஊரடங்கு பிறப்பித்தால் கரோனா நோயைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு தொடர் ஊரடங்கு பிறப்பித்ததால் 10 நாள்களில் தொற்று குறையும். மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நோய்த்தொற்றைச் சமாளிப்பது கடினமாகிவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கரோனை தடுப்பு விதிகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என்றால் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என முதலைமைச்சர் நாராணயசாமி கூறியிருந்தார்.

இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் மீண்டும் ஊரடங்கு - புதுச்சேரி அரசு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details