கரோனா தொற்று பரவுதலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு கூறும் விதிமுறைகளின்படி ஒரு சில பல் மருத்துவமனைகளைத் திறக்கலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிவப்பு மண்டலங்களில் உள்ள ஒரு சில பல் மருத்துவமனைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நோயாளிகள் அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.