1992ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடத்திவந்தது. இந்த மாத தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியா கோபால் தாஸ், உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோர் பாபர் மசூதியை இடிக்க முயன்ற சமூக விரோதிகளை தடுக்க முற்பட்டு உள்ளனரே தவிர, சதித்திட்டம் செய்யவில்லை. அதேபோல, குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தரப்பு உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை என கூறி அவர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக எல்.கே.அத்வானி பங்கேற்றார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட எல்.கே.அத்வானி, " பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனை முழு மனதோடு, சிரம் தாழ்ந்து வணங்கி வரவேற்கிறேன்.