பிகாரில் நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஆணையம் பிகார் தேர்தலுக்கான தேதியினை அறிவிக்காமல் உள்ளது.
இதற்கிடையில் வரவிருக்கும் பிகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி தொடரும் என கடந்த வாரம் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக நம்மிடம் பேசிய லோக் ஜனசக்தியின் செய்தித் தொடர்பாளப் சஞ்சய் சிங், ”எதிர்வரும் பிகார் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதற்கு பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.