கர்நாடகாவில் இரண்டாவது நாள் மது விற்பனையின் போது, 36.37 லிட்டர் இந்திய மதுபானங்கள் மூலமாக ரூ.182 கோடியும், 7.02 பீர் ரக மதுபானங்கள் விற்பனை மூலமாக ரூ.15 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
கரோனா முடக்கத்துக்கு பின்னர், 41 நாள்கள் கழித்து கர்நாடகாவில் மதுபானங்களின் விற்பனை திங்கள்கிழமை (மே4) தொடங்கியது. முதல் நாள் மட்டும் ரூ.45 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
இந்நிலையில் இரண்டாவது நாள் மது விற்பனை ரூ.182 கோடியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பீர் மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.