கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு சில தளர்வுகளுக்கு அனுமதியளித்தைத் தொடர்ந்து, ராஜாஸ்தான் அரசு பச்சை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது.
இருப்பினும் மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர்.