பீகார் மாநிலம், சாப்ரா பகுதியில் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி, ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவமானது தியாரா என்னும் பகுதியில் உள்ளூர்வாசிகள் நிலத்தை அளவிடுவதற்காகச் சென்றபோது நடைபெற்றுள்ளது. அந்நேரத்தில் காற்று வேகமாக அடித்ததால் உள்ளூர்வாசிகள் குடிசைப்பகுதி ஒன்றில் தஞ்சமடைந்தனர். ஆனால், கனமழையில் அது சேதாரமானதைத் தொடர்ந்து பலர் படுகாயமடைந்தனர்.