தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2020, 9:29 PM IST

ETV Bharat / bharat

ஒடிசாவில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஆறு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் படுகாயமடைத்துள்ளனர்.

ஒடிசாவில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு!
Lightening attack

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டம் பாண்டுவா என்னும் கிராமத்தில் 12 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி அவர் உயிரிழந்தார்.

மேலும் சபுவாஹி, இஞ்சோல், பஹாரிபூர் ஆகிய வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், பலசூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களோடு மருத்துவமனையையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details