தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வலையில் சிக்கிய சிறுத்தை மீட்பு! - தெலங்கானா

தெலங்கானா: வலையில் சிக்கித் தவித்த சிறுத்தையை, நேரு விலங்கியல் பூங்காவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மீட்டனர்.

Leopard trapped in snare
வலையில் சிக்கித் தவித்த சிறுத்தை

By

Published : Jan 16, 2020, 1:29 PM IST

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள பன்றிகளைப் பிடிப்பதற்காக விவசாயிகள் வலை அமைத்துள்ளனர். அந்த வலையில், எதிர்பாராத விதமாக ஐந்து வயதுடைய சிறுத்தை சிக்கிக்கொண்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நேரு விலங்கியல் பூங்காவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், வலையில் சிக்கித் தவித்த சிறுத்தையை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுத்தையை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வலையில் சிக்கித் தவித்த சிறுத்தை

விலங்குகளை பிடிக்க வலைகள் அமைக்கும் செயலில் ஈடுபடக்கூடாது, விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விலங்கியல் பூங்காவின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் படுத்திருந்த சிறுத்தை - வாகன ஓட்டிகள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details