தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2019, 5:14 PM IST

ETV Bharat / bharat

சிறுத்தை குட்டி தோலை கடத்த முயன்ற 4 பேர் கைது!

ஹைதராபாத்: ரச்சக்கொண்டாவில் சிறுத்தை குட்டியை வேட்டையாடி அதன் தோலை கடத்தி விற்க முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுத்தை குட்டி தோலை கடத்த முயன்ற 4 பேர் கைது!

யானை, புலி, சிறுத்தைகளின் எலும்பு, நகம் மற்றும் தோல் ஆகியவை கள்ள சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு விலை போவதால், சட்டத்திற்கு விரோதமாக விலங்கு வேட்டைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனையொட்டி புலிகளை வேட்டையாடி அதன் தோலை விற்பனை செய்து வந்த 8 முதல் 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலை தெலங்கானா மாநிலம், ரச்சகொண்டா காவல்துறையினர் கடந்த திங்கள் அன்று கைது செய்தனர்.

கைது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஆந்திரா - ஒடிசா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் எல்லை பகுதியில் உள்ள ஸ்ரீகாக்குளம் பகுதியில் 2 வயதேயான சிறுத்தை குட்டியை மூன்று மாதத்திற்கு முன்பு கடத்தி, அதன் தோலை ரூ. 5 லட்சத்திற்கு இந்த கும்பல் பேரம் பேசியிருந்தது. இதுவே புலி தோலாக இருந்தால் ரூ.25 லட்சம் வரைக்கும் விலைபோயிருக்கும் என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details