நிலவின் மேற்புறத்தை ஆராயும் வகையில் இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை மாதம் அனுப்பியது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2, கடைசி நேரத்தில் லேண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
லேண்டர் தரையிறங்குவதில்தான் தோல்வி ஏற்பட்டதே தவிர, ஆர்பிட்டார் எனப்படும் வட்டமடிப்பான் தொடர்ந்து நல்ல முறையிலேயே செயல்பட்டுவருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வை தொடர்ந்து ஆர்பிட்டார் மேற்கொண்டுவருகிறது.