தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2020, 1:02 PM IST

ETV Bharat / bharat

தெலங்கானாவில் மாநகராட்சி ஊழியர்களுடன் மதிய உணவை பகிர்ந்த அமைச்சர்!

ஐதராபாத் : கரோனா நோய்த் தொற்றை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றும் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியின் (ஜி.எச்.எம்.சி) ஊழியர்களுடன் தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ் மதிய உணவு சாப்பிட்டார்.

GHMC workers  Hyderabad  Telangana  KT Rama Rao  TRS Party  COVID 19  Novel Coronavirus  அமைச்சர் கே.டி. ராமா ராவ்  தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ்
KT Rama Rao

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்களாக இருக்கும் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியின் (ஜி.எச்.எம்.சி) ஊழியர்களுடன் தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.டி. ராமா ராவ் மதிய உணவு சாப்பிட்டார்.

அப்போது பேசிய அவர், "கரோனா நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மருந்துவர்கள், காவல் துறையினருக்கு இணையாக மாநகராட்சி ஊழியர்களும் செயல்படுகின்றனர். ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடமைகளைச் செய்யும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நெருக்கடி நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு முழு ஊதியத்துடன் சிறப்பு ஊதியம் வழங்க முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:புனேவில் கரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு!

ABOUT THE AUTHOR

...view details