மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கிருஷ்ணா பாசு (89). இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதனிடையே சமீபத்தில் கிருஷ்ணா பாசுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், நேற்று கிருஷ்ணா பாசு மாரடைப்பால் காலமானதாக அவரது மகன் சுமந்த்ரா போஸ் அறிவித்தார். அவரது மறைவிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.