Latest National News: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாலி தாமஸ். இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு உறவினரான ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பின் சொத்துக்கு ஆசைப்பட்ட இவர், 2002 முதல் 2016ஆம் வரை ஆறு பேரை சயனைடு கலந்த சூப் அளித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களில் சந்தேகம் இருப்பதாக ஜாலியின் முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.