கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு யானை மட்டும் வாழ்ந்துவந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அந்த யானையை ’கிங் யானை’ என்று செல்லமாக அழைத்துவந்தனர்.
முருசவீரா மடத்தில் வசித்துவந்த இந்த யானை, 1971ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தது. இதனால் யானையின் இறுதிச்சடங்கில் அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அதன்பின்னர், அந்த யானையின் உடல் விலங்கியல் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில், ஹூப்ளியில் உள்ள பி.சி. ஜாபின் கல்லூரிக்கு மருத்துவப் பேராசிரியர்கள் அதன் உடலைக் கொண்டுவந்தனர்.