இந்தியா முழுவதும் தீர்க்க முடியாத ஒரு சமுதாய பிரச்னையாக பார்க்கப்படுவது, கள்ளநோட்டு விவகாரம். இதற்காக அனைத்து உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளையும் மாற்றிடும் அறிவார்ந்த ஒரு முயற்சியையும் இந்திய அரசு மேற்கொண்டது. ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை.
இந்த நிலையில், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல் துறையில் பயின்று வரும் ஆறு மாணவர்கள் குழுவாக இணைந்து சிறப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ரூபாய் நோட்டுகளை புகைப்படமாகப் பிடித்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்தால், அவை போலியானதா அல்லது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான நோட்டா என்பதை எளிதில் அறிந்துகொள்ளும் விதமாக அந்த செயலிக்கு கோடிங் வழங்கப்பட்டுள்ளது.