தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாஜகதான் அடுத்த 50 ஆண்டு ஆளும்' - உ.பி. துணை முதலமைச்சர் - பாஜக தான் அடுத்த ஐம்பது வருடம் ஆளும் என கூறிய கேசவ் பிரசாத் மவுர்யா

லக்னோ: பாஜகதான் அடுத்து வரக்கூடிய ஐம்பது ஆண்டுகளும் இந்த நாட்டை ஆளும் என உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார்.

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யா

By

Published : Oct 8, 2019, 11:32 AM IST

சமாஜ்வாதி கட்சி வளர்ந்துள்ளதாகவும் தாங்கள் நிச்சயமாக 2022ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சியை அமைப்போம் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யா, நாட்டு மக்களுக்காக பணியாற்றும் பாஜக அரசு இங்கு உள்ளது. இந்த அரசே அடுத்த வரும் ஐம்பது ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அடுத்த ஐம்பது ஆண்டுகள் பொறுமைகாக்க வேண்டும் என்று சொன்ன அவர், அதற்குப்பிறகு வாய்ப்பிருந்தால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று அகிலேஷை கிண்டல் செய்தார்.

இதையும் படிங்க : முன்னாள் பிகார் முதலமைச்சர் லாலு பிரசாத் மகள் மீது மருமகள் குற்றச்சாட்டு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details