தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2020, 12:18 PM IST

ETV Bharat / bharat

சென்னை ரயிலில் தங்கக் கடத்தல்: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருவனந்தபுரம்: சென்னை ரயிலில் தங்கத்தை கடத்திய இருவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

gold worth Rs 1.04 cr seized
gold worth Rs 1.04 cr seized

கேரள மாநிலம் கொச்சியில் ரயிலில் பயணிக்கும் இருவர் தங்களது இடுப்பில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பதாக கொச்சி சுங்க இலாகாவிற்கு தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை- ஆழப்புழை ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்திற்கிடமான இருவரிடம் மேற்கொண்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1,989 கிலோ எடையிலான தங்கக் கம்பி, கட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் மீது தாக்குதல்...!

இதே வாரத்தில் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 674 கிராம் எடையுள்ள தங்க கேப்சுல்களை கேரள விமானப் புலானாய்வு பிரிவினர் கைப்பற்றியது நினைவுக் கூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details