மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்லலாம் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, சில பெண்கள் கோயிலுக்குச் செல்ல முற்பட்டார்கள். ஆனால், சிலர் அதனை தடுத்து நிறுத்தியதால் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின.
இந்நிலையில், சபரிமலை கோயிலுக்குச் செல்ல முற்பட்ட பம்பையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். புதுச்சேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் கோயிலுக்குச் சென்றதாகவும், கோயில் வாயிலில் நின்று கொண்டிருந்த காவல் துறையினர் சிறுமியை தடுத்து நிறுத்தி வயது குறித்த சான்றிதழை கேட்டதாகவும் கூறப்படுகிறது.