தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2020, 7:53 PM IST

ETV Bharat / bharat

இரவுப்பணியில் பெண்கள் வேலை பார்க்க கேரள அரசு அனுமதி!

திருவனந்தபுரம்: தொழிற் சாலைகளில் இரவுப் பணியில் பெண்கள் வேலை பார்க்க இருந்த தடையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மாநிலம், கொச்சினில் தொடங்கிய இரண்டு நாள்கள் வணிக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

'நாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகளை கலைந்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று பேசி வருகிறோம். அப்படியிருக்க தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் பெண்கள் வேலை செய்ய தடையிருப்பது எப்படி ஏற்புடையதாகும்?' என்று கேள்வியெழுப்பியவர், ' ஆண்கள் இரவுப் பணியில் வேலை பார்க்க முடியும் என்றால், ஏன் பெண்களால் பார்க்க முடியாது? ' எனவும் வினவினார்.

'ஆகையால் பெண்களுக்கும் இனிமேல் இருந்து தொழிற்சாலைகளில், இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணிவரை வேலை பார்க்கலாம். இது பெண்கள் முன்னேற்றத்திற்கு மேலும் வழிவகுக்கும்' என்றார்.

தொடர்ந்து பேசியவர், 'பெண்கள் இரவுப் பணிகளில் வேலை செய்ய ஏதுவாக தொழிற்சாலைகளில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்து தர அந்நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.

இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் 2019ஆம் ஆண்டில் இதேபோன்று தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடுலாம் என உத்தரவிட்டது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் வேலை பார்க்கக்கூடாது என்று கேரளா உயர் நீதிமன்றம் 2015ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: சர்வாதிகாரத்தை அகிம்சை மூலம் எதிர்கொள்ள வேண்டும் - சரத் பவார்

ABOUT THE AUTHOR

...view details