தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல்: விசாரணைக்காக துபாய்க்கு பறக்கும் என்ஐஏ - கேரள தங்கக் கடத்தல் பாசில் பரீத்

டெல்லி: கேரள தங்கக் கடத்தில் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு தேசிய புலனாய்வு முகமை விரைவில் துபாய் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

NIA
NIA

By

Published : Aug 8, 2020, 8:24 PM IST

கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரம் தற்போது அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் புகார் எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலானய்வு முகமை (என்ஐஏ) ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ். சரித், சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மேலும், ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம், 982.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாசில் பரீத்திடம் விசாரிக்க என்ஐஏ விரைவில் துபாய் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் என்ஐஏ நீதிமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'கரோனாவால் விவசாயத்திற்குப் பாதிப்பில்லை; கிராமப் பொருளாதாரம் நிலையாக உள்ளது'

ABOUT THE AUTHOR

...view details