தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்வப்னா சுரேஷுக்கு அக்டோபர் 8ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் - தேசிய புலனாய்வு முகமை

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 12 குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

NIA
NIA

By

Published : Sep 18, 2020, 10:03 PM IST

கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி திருவனந்தபர விமான நிலையத்தில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார் என புகார் எழுந்துள்ளது.

கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரத்தில், அம்மாநில அமைச்சர் கே.டி. ஜலீல்லுக்கு தொடர்பு உள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக பெரும் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

உடல் நல குறைவை காரணம் காட்டி ஸ்வப்னா சுரேஷ் பிணை கேட்கும் நிலையில், அதற்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கும் நீதிமன்ற காவலை வரும் அக்டோபர் 8ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய புலனாய்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட 103 வயது முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details