கரோனா பரவல் காரணமாக நாடே வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஒருநாள் மக்கள் ஊரடங்கு, அடுத்த இரு தினங்களில் 21 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது வருகிற 17ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா ஏற்படுத்திய இந்த சுகாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில்லாத பகுதிகள் பசுமை மண்டலமாகவும், நடுத்தர பாதிப்பு கொண்டவை ஆரஞ்சு மண்டலமாகவும், அதீத பாதிப்பு கொண்ட பகுதிகளுக்கு அபாய நிறமான சிவப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அழுத்தம் காரணமாக மக்கள் வீடுகளில் கிட்டதட்ட ஒரு மாதத்துக்கு மேலாக முடங்கியுள்ளனர். இந்த காலத்தை பயனுள்ளதாக மாற்றியுள்ளார் கேரள மாநிலம் கன்னூர் பரியாரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரவியல் பொறியியல் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங்) பட்டதாரி மாணவர் அக்ஷய்.
பூட்டு வீட்டுக்கு தான் மனதுக்கு அல்ல என்று உணர்ந்த அக்ஷய், தென்னை ஓலை, தேங்காய் ஓடுகள் (சிரட்டை), சின்னஞ் சிறிய குச்சிகள் கொண்டு தனது தனித்திறமையால் வீட்டிலிருந்தபடியே ஈபிள் கோபுரம் (டவர்), பிரமிடு உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளார்.