தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், டெல்லி அரசு மருத்துவமனைகளில் டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வரும் சூழலில் கெஜ்ரிவாலின் இக்கருத்து கடும் கண்டனங்களை சந்தித்தது.
இதையடுத்து, டெல்லி அரசின் இந்த உத்தரவுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தடை விதித்தார். கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.