தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் - டெல்லி காற்று மாசு

டெல்லி: விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் என அண்டை மாநிலங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kejriwal
Kejriwal

By

Published : Nov 6, 2020, 5:44 PM IST

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் தேசிய தலைநகரான டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. கரோனா காலத்தில் காற்று மாசு ஏற்பட்டால் குழந்தைகள் முதியவர்கள் ஆகியோர் பெரும் இன்னலுக்குள்ளாவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், விவசாய கழிவுகளை எரிப்பதற்கு தடை விதித்து அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேளாண் கழிவுகளை எரிக்கும் ஏழை விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் என அண்டை மாநிலங்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை கைது செய்து அண்டை மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழை விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் என அண்டை மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பூஷா மையம் ஒரு தீர்வினைக் கண்டுபிடித்துள்ளது. அதனைத் தெளித்தால் வேளாண் கழிவு 20 நாட்களில் உரமாக மாறிவிடுகிறது.

டெல்லி முழுவதும் இதனை இலவசமாக வழங்கியுள்ளோம். இது நல்ல தீர்வினை அளித்துள்ளது. விவசாயிகளுக்கு இதனை இலவசமாக அளிக்க வேண்டும். பின்னர் அவர்கள் வேளாண் கழிவுகளை எரிக்க மாட்டார்கள். நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை மதிக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details