கேப்டன் அமோல் உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் சோதனை விமானத்தை உருவாக்கினார். இந்தத் திட்டத்தை அவர் 2016ஆம் ஆண்டே நிறைவேற்றினார். தொடர்ந்து பல சோதனை முயற்சிகள் நடந்தன. தற்போது அந்த விமானம் 6 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்டன் அமோலை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு வெறும் பாராட்டு மட்டும் தெரிவிக்கவில்லை; பெரிதாக கனவு காணுங்கள் என்றும் வாழ்த்தினார். கேப்டன் அமோல் ஒரு தொழில்முறை விமானி ஆவார். இந்தியாவில் சிறிய ரக விமானங்களை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் கனவு. இதற்காகத் தொடர்ந்து முயற்சித்த அமோல், தற்போது சாதித்துள்ளார்.