தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (டி.எஸ்.ஆர்.டி.சி) தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை இன்று பணியில் சேருமாறு கேட்டுக்கொண்டார்.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், டி.எஸ்.ஆர்.டி.சி-யின் ஆபத்தான நிதி நிலையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார் அதில்.
- ஊழியர்கள் பணியில் சேர எந்த நிபந்தனையும் இருக்காது.
- அரசு நிதி உதவியாக ரூ. 100 கோடியை உடனடியாக ஒப்புதல் செய்யப்படும்.
- அடுத்த திங்கட்கிழமை முதல் பேருந்து கட்டணத்தை ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 20 பைசா உயர்த்த டி.எஸ்.ஆர்.டி.சிக்கு அரசு அனுமதிக்கிறது.
- வேலை நிறுத்த காலத்தில் இறந்த ஊழியர்களின் குடுபத்தில் ஒருவருக்கு அரசாங்கம் வேலை வழங்கப்படும்.
- பணியாளர் நல கலந்தாய்வுகளை அரசு தொடங்க உள்ளது.