அனுபவத்தின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், நெருக்கமானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்பு மூத்த ஐபிஎஸ் அலுவலர் சுனில் குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை கூடுதல் இயக்குநராக பதவி வகித்துவரும் ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஓய்வுபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சுனில் குமாருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மூத்த ஐபிஎஸ் அலுவலர் ரவீந்திரநாத் தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.