கர்நாடகா மாநிலம், தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் டி.எம் விஜய் பாஸ்கரின் தலைமையிலான குழுவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழு மாநிலத்தின் முக்கியத் தொழிலதிபர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்பார்கள். இதற்கு முன்னதாக, இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நிர்வாகமற்ற தலைவருமான நந்தன் நிலகேனி, பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் போன்ற தொழிலதிபர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.