தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தவறான பரிசோதனை முடிவு: மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மருத்துவர் - கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு

கரோனாவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவரின் பரிசோதனை முடிவுகள் தவறானவை என்பது தெரியவந்துள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

By

Published : May 26, 2020, 4:39 PM IST

கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடைய சோதனை முடிவுகள் தவறானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்போது அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மருத்துவரின் தற்போதய பரிசோதனை அறிக்கையின்படி, வெவ்வேறு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பல கட்ட சோதனைகளில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதும், அவரது நெருங்கிய தொடர்புகள், உறவினர்கள் என எவரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையின்போது அவர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் பிரத்யேக தனிமைப்படுத்தும் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய பாஜக எம்பி

ABOUT THE AUTHOR

...view details