பெங்களூரு: கரோனா பரவல் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் எடியூரப்பா கூட்டத்தைக் கூட்டினார்.
இக்கூட்டத்தில் தற்போதைய கரோனா சூழல்கள், வேளாண்மைச் சாத்தியக்கூறுகள், வெள்ளம் ஏற்படும் சமயத்தில் செய்யவேண்டிய நடைமுறைகள் என அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டது. மேலும், கரோனா, கரோனா அல்லாத சிகிச்சைகள் அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அலுவலர்ளுக்கு உத்தரவிட்டார். அதோடு தொற்று பரிசோதனை நிலையங்களையும் தீவிரமாகக் கண்காணிக்கவும், அதிகப்படுத்தவும் உத்தரவிட்டார்.