அருண் ஜேட்லி மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் இரங்கல்
பெங்களூரு: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர்
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நிதியமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்தவர் அருண் ஜேட்லி. அவரது மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.