கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் ஹிரேமத் என்ற சிற்பக் கலைஞர் ஒருவர் கேரளாவில் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யானை சிலை ஒன்றை களிமண்ணால் உருவாக்கியுள்ளார்.
யானையின் கருவில் குட்டி இருப்பதைப் போன்று அந்த சிலையை ஹிரேமத் உருவாக்கியுள்ளார். தான் உருவாக்கிய சிலையின் வழியாக விலங்குகளின் உரிமை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க விரும்பியதாக ஹிரேமத் தெரிவித்தார்.